ஞாயிறு, 3 ஜூலை, 2016

தண்ணீர்

அசோகமித்திரனின் தண்ணீர் புதினம் வாசகனுக்கு ஓர் புதிய அகதரிசனத்தைத் தரும் அற்புதமானபடைப்பு.சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையின் ஊடாக இந்த சமூக அமைப்பின் சகல அவலங்களையும் தனது எழுத்தின் வழியே நிகழ்த்திக் காட்டி விடுகிறார்.அரசின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் பிரச்சனை, பல ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தர வேலையற்ற கூலிகள்,மெல்லிய திரையின் பின்னால் தெரியும் நகரின் சாதிய அரிதாரம் பூசிய முகங்கள்,வாழ்வில் எந்த சுகமும் அறியாத டீச்சர்,அவளின் கொடுமைக்கார மாமியார் மற்றும் வயதான நோயாளிக் கணவன்,ஓர் சாதாரணக் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் சாயா,தோல்வியினால் ஆசீர்வதிக்கப்பட்டுப் பின் தவறான வழியில் தனது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மனமின்றி அதனுடன் வாழ முடிவுசெய்து வாழ்வை நேருக்கு நேராக எதிர்நோக்கும் துணிவுள்ள ஜமுனா என இச்சிறிய புதினத்துக்குள் இத்தனை கதாபாத்திரங்கள் அதனதன் கதியில் உலவுகின்றன.இறுக்கமாய்க் கதை சொல்லும் பாணி அசோகமித்திரனின் தனித்துவம். என்னளவில் தமிழின் முக்கிய புதினங்களில் தண்ணீரும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக