ஞாயிறு, 3 ஜூலை, 2016

மராட்டியத் திரைப்படம்

சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின்போது Dr.பிரகாஷ் பாபா ஆப்தே என்ற மனிதரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட ஓர் மராத்தியத் திரைப்படத்தைக் காண நேர்ந்த்து.Dr.பிரகாஷாக நானா படேகர் நடித்திருந்தார்.சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் ஒரு தம்பதியினரின் கதை தான் Dr.பிரகாஷ் திரைப்படம். அடர் காட்டினில் வாழும் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக புலம் பெயர்ந்து காட்டுக்குள் வாழும் சூழலிலிருந்து அந்தப் பகுதி ஒரு கிராம்மாக வளர்வதற்கு வித்திட்ட கதையைச் சொல்கிறது இப்படம். பழங்குடியினர், தந்தையின் உயிருக்காக சிசுவை பலி கொடுப்பதைத் தடுப்பதில் இருந்து தொடங்கும் பயணம் சில ஆண்டுகள் கழித்து வரும் முதல் நோயாளியின் நோயை அறிய முற்படுகையில் வரும் மொழிப் பிரச்சனையில் தொடங்கிப் பல பிரச்சினைகளை அத்தம்பதி வெற்றிகரமாக எதிர்கொண்ட கதை தான் இப்படம். படம் எடுக்கப்பட்ட விதத்தில் இயக்குனரின் முதிர்ச்சியின்மை பல இடங்களில் தெரிகிறது.பல இடங்களில் உணர்ச்சி ததும்பும் வசனங்களால் நிரப்பப்பட்டிருந்தன.ஓரிடத்தில் கூட காட்சி ஊடகத்தின் பலம் பிரயோகிக்கப்படவில்லை.மேலும் அரசுஅதிகாரிகள் பொது அறிவு அற்றவர்களாகவும்,அகம்பாவம் பிடித்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.இவற்றை எல்லாம் மீறி ஓர் உன்னதமான ஆளுமை குறித்த ஆவணப்படுத்துதல் என்ற வகையில் படத்தின் எல்லா குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது.சக உயிர்களிடம் அன்பு செலுத்துகிற உயிரின் அடிப்படைக் குணத்தைக் கூட உன்னதமான என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் நமது சமூக அமைப்பு உள்ளது.முழுத் திரைப்படம்youtubeல் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக