ஞாயிறு, 25 ஜூலை, 2010

துரோகம்

நெடுநாளாய்த் தேடிய
பழம் ஒன்று
சோம்பல் பொங்கும்
ஞாயிறொன்றின்
பகல் பொழுதில்
சட்டென
வெளிப்பட்டது.
தன்னைப் புசிக்கச்
சொல்லி
மண்டியிட்டு மன்றாடியது.
வேட்கையின் ரேகை
முகத்தில் படர
புசிக்கத் துவங்கியதும்
நெஞ்சை நனைத்தது
எச்சில்,
தாடை,
கழுத்தென
எல்லைகள் கடந்து.
சுவையில் முயங்கிப்
புசிக்கப் புசிக்கப்
வேட்கையுடன்
பழமும்
கைகோர்த்து
வள்ர்ந்தன.
என்னுயரம் தாண்டி
கூரை கிழித்து
விஸ்வரூபித்ததும்,
என்னைப்
புசிக்கத்
துவங்கியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக